காங்கிரஸ் முன்னாள் எம்.பி. அன்பரசு சாவில் மர்மம் என புகார் - உடற்கூறு ஆய்வுக்கு உடலை அனுப்பியதால் பரபரப்பு
காங்கிரஸ் மூத்த தலைவர் அன்பரசு.மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவர் நேற்று திடீரென உடல்நலக்குறைவால் காலமானார்.
சென்னையில் பூந்தமல்லியை அடுத்த குமணன் சாவடியில் வசித்து வந்தவர் காங்கிரஸ் மூத்த தலைவர் அன்பரசு.மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவர் நேற்று திடீரென உடல்நலக்குறைவால் காலமானார். இந்த நிலையில் தனது தந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் அவரது மகன் அருள் அன்பரசு புகார் அளித்தார். இது குறித்து பூந்தமல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அன்பரசு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை உருவானது.
Next Story