தமிழகத்திற்கு அடுத்த 4 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறப்பு

காவிரியில் தற்போது திறக்கும் தண்ணீரை 4 நாட்களுக்கு திறக்க வேண்டும் என்று கர்நாடகாவிற்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்திற்கு அடுத்த 4 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறப்பு
x
காவிரியில் தற்போது திறக்கும் தண்ணீரை 4 நாட்களுக்கு திறக்க வேண்டும் என்று கர்நாடகாவிற்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டு உள்ளது.
இக்குழுவின் தலைவர் நவீன் குமார் தலைமையில் புதுடெல்லியில் , கூட்டம் நடைபெற்றது. பல மணி நேரம் நீடித்த இந்த கூட்டத்தில்  இந்த முடிவு எடுக்கப்பட்டது. முடிவில்,  செய்தியாளர்களிடம் பேசிய  நவீன் குமார், கடந்த ஜூலை மாதம் 31 ஆம் தேதிக்கு பிறகு காவிரி, கபினி பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழை பெய்திருந்தாலும் , மொத்த மழையின் அளவு பற்றாக்குறையாக உள்ளது என்று தெரிவித்தார். இதனிடையே, காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் அடுத்த கூட்டம் வருகிற 13ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்