மதுரையில் சிறை காவலர் குடியிருப்பு பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த ரவுடி கைது
மதுரையில் சிறை காவலர் குடியிருப்பு பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்ததாக தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி கீரிமணி உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரையில் சிறை காவலர் குடியிருப்பு பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்ததாக தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி கீரிமணி உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். இருவரும் ஆரப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கீரிமணி மற்றும் கூட்டாளி குமாரை பொதுமக்கள் துணையுடன் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பின்னர் தேனி சிறையில்அடைத்தனர்.
Next Story