தமிழ்நாட்டுக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல்

ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு கடத்த முயன்ற 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழ்நாட்டுக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல்
x
ஆந்திராவில் இருந்து, தமிழ்நாட்டுக்கு கடத்த முயன்ற 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆந்திராவின், சித்தூர் மாவட்டத்தில் நடந்த வாகன சோதனையின்போது, வேலூர் மாவட்டம் குடியாத்தம் நோக்கி வந்த லாரியை  போலீசார் நிறுத்தியுள்ளனர். லாரி நிறுத்தாமல் சென்றதால், அதை துரத்தி பிடித்த போலீசார், அதில் இருந்த 48 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்ததுடன்,  3 பேரையும்  கைது செய்தனர் . கடத்தி வரப்பட்ட செம்மரக் கட்டைகளின் மதிப்பு சுமார் 60 லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறிய போலீசார்,  கைதானவர்களிடன் விசாரணை  மேற்கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்