75% கூலி உயர்வு கிடைக்கும் வரை வேலை நிறுத்தம் - கும்பகோணம் குத்துவிளக்கு தொழிலாளர்கள் திட்டவட்டம்

கூலி உயர்வு கோரி, தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோவிலில் குத்துவிளக்கு தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
75% கூலி உயர்வு கிடைக்கும் வரை வேலை நிறுத்தம் - கும்பகோணம் குத்துவிளக்கு தொழிலாளர்கள் திட்டவட்டம்
x
கூலி உயர்வு கோரி, தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோவிலில் குத்துவிளக்கு தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்து உலகப் புகழ்பெற்ற குத்து விளக்குகள், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்கும், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் ஏற்றுமதியாகின்றன. 75 சதவிகித கூலி உயர்வு கிடைக்கும் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக குத்து விளக்கு தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ளதால், பலர் வேலை இழந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்