ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சையாக பேசியதாக வழக்கு - இயக்குநர் ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன் அளித்த நீதிமன்றம்

பொதுக்கூட்டத்தில் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சையாக பேசியதாக இயக்குநர் ரஞ்சித் மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சையாக பேசியதாக வழக்கு - இயக்குநர் ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன் அளித்த நீதிமன்றம்
x
நீதிமன்ற உத்தரவுபடி  திரைப்பட இயக்குநர் ரஞ்சித், 2 வது  நாளாக திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். தஞ்சை மாவட்டம், திருப்பனந்தாளில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சையாக பேசியதாக இயக்குநர் ரஞ்சித் மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீன் அளித்த கும்பகோணம் நீதிமன்றம், திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் 3 நாட்கள் நேரில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று கையெழுத்திட்ட ரஞ்சித், இன்று இரண்டாவது நாளாக நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார்.  அவருடன் நீலப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் 50க்கும் மேற்பட்டோர் வந்ததால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்