கஞ்சா போதையோடு வந்த கும்பல் சரமாரி தாக்குதல்

தாம்பரம் அருகே கஞ்சா போதையோடு வந்த 10 பேர் கொண்ட கும்பல், பெட்ரோல் பங்க் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கஞ்சா போதையோடு வந்த கும்பல் சரமாரி தாக்குதல்
x
ஆலப்பாக்கத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கிற்கு, கத்தி, வீச்சறுவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களோடு, ஒரு கும்பல் வந்தது. கஞ்சா போதையில் இருந்த அந்த கும்பல், திடீரென பெட்ரோல் பங்க் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இதில் 3 பேருக்கு பலத்த காயமும் ஏழு பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டது. பலத்த காயம் அடைந்த ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விசாரணையில் கஞ்சா விற்பனை தொடர்பாக ஏற்பட்ட கோஷ்டிபூசலில், இளவரசன் என்ற இளைஞரை அந்த கும்பல் தேடி வந்ததும், அந்த நபர் கிடைக்காத ஆத்திரத்தில், ஊழியர்கள், வாடிக்கையாளர்களை சரமாரியாக தாக்கியதும் தெரியவந்துள்ளது. சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த பீர்க்கன்கரணை போலீசார், சம்பவத்தில் தொடர்புடைய 10 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்