காமராஜர் மணிமண்டபத்தை வரும் 15ஆம் தேதி முதல்வர் காணொலி காட்சி மூலம் திறக்கிறார் - சரத்குமார்

விருதுநகர் அருகே அமைக்கப்பட்டு உள்ள காமராஜர் மணிமண்டபத்தை சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் நேரில் பார்வையிட்டார்.
x
விருதுநகர் அருகே அமைக்கப்பட்டு உள்ள காமராஜர் மணிமண்டபத்தை சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் நேரில் பார்வையிட்டார். அங்கு தந்தி டி.வி.க்கு பேட்டி அளித்த சரத்குமார், காமராஜரின் 117வது பிறந்தநாளையொட்டி அவரது மணிமண்டபத்தை முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளதாக தெரிவித்தார். காமராஜர் சிலை மற்றும் மணிமண்டப வளாகத்தில் அணையா விளக்கு மற்றும் செயற்கை நீரூற்று போன்றவை சிறப்பாக அமைக்கப்பட்டு உள்ளதாக சரத்குமார் பாராட்டு தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்