உலக சாதனைக்காக 60 மணிநேரம் தொடர் இசை நிகழ்ச்சி
கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உலக சாதனைக்காக 60 மணிநேரம் தொடர் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உலக சாதனைக்காக 60 மணிநேரம் தொடர் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. சாய் கலாஷேத்திரா மற்றும் பெரியநாயக்கன் பாளையம் ஏ.என்.எஸ். கல்சுரல் சென்டர் சார்பில் கடந்த 5-ம் தேதி தொடங்கிய இசை நிகழ்ச்சியில், 5 முதல் 55 வயது வரை உள்ள 59 பாடகர்கள் பங்கேற்றனர். தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் பக்தி, கிராமிய மற்றும் திரைப்பட பாடல்கள் என சுமார் 750 பாடல்களை இடைவிடாது 60 மணி நேரம் தொடர்ந்து பாடி சாதனை படைத்தனர்.
Next Story