ஹெல்மெட் விதிமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத காவல் துறையினர் மீது நடவடிக்கை - உயர்நீதிமன்றம்

ஹெல்மெட் விதிமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க காவல் ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தக் கோரி சென்னை கொரட்டூரைச் சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் எஸ். மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது,அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் அரசு தரப்பில் கோரப்பட்டது.இரு சக்கர வாகனங்களில் பின் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் அணிவதில்லை எனவும் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அப்போது,பின் அமர்ந்து செல்பவர்களில் 100 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியவில்லை என்றால் 100 சதவீத வழக்குகள் பதிவாகாதது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.மேலும்,இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிவதை சென்னை மாநகர காவல் ஆணையர் உறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.மேலும், ஹெல்மெட் அணியாதவர்கள் மீது  நடவடிக்கை எடுக்காத காவல் துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஜூலை 5-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்