கூவத்தூர் அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து - சிறு காயங்களுடன் உயிர் பிழைத்த மாணவர்கள்

கூவத்தூர் அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 மாணவர்கள் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தனர்.
கூவத்தூர் அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து - சிறு காயங்களுடன் உயிர் பிழைத்த மாணவர்கள்
x
செய்யூரை அடுத்த சிக்கனம் குப்பத்தில் இருந்து, 30 பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு கூவத்தூர் நோக்கி வேன் புறப்பட்டது. மடையம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், வேனில் பயணம் செய்த 30 மாணவர்களும் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தனர்.சத்தம் கேட்டு  ஓடிவந்த பொதுமக்கள், மாணவர்களை மீட்டு பவுஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை முடிந்து மாணவர்கள் வீடு திரும்பினர்.

Next Story

மேலும் செய்திகள்