மயிலாடுதுறை : மாங்காய் திருடியதை காட்டி கொடுத்ததாக இளைஞர் கொலை

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே, மாங்காய் திருடியதை காட்டிக் கொடுத்ததாக, கார்த்தி என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டார்.
மயிலாடுதுறை : மாங்காய் திருடியதை காட்டி கொடுத்ததாக இளைஞர் கொலை
x
நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே, மாங்காய் திருடியதை காட்டிக் கொடுத்ததாக, கார்த்தி என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டார். குணசீலன், மணிவாசகம் ஆகிய இருவர், மாங்காய் திருடியதாக தங்களை மாட்டி விட்டதாக கூறி, கார்த்தியிடம் தகராறில் ஈடுபட்டனர். இதில் படுகாயம் அடைந்த கார்த்தி, மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான குணசீலன், மணிவாசகத்தை தேடி வருகின்றனர். இந்நிலையில், அவரது உறவினர்கள், சாராயம் விற்று வந்த சிரஞ்சீவி என்பவரை எதிர்த்ததால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, சிரஞ்சீவி தூண்டிவிட்டே கார்த்திக் கொலை செய்யப்பட்டதாக, குற்றம் சாட்டியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்