சிறுவர்களுடன் கட்டிலில் படுத்துறங்கிய பாம்பு

கடலூர் அருகே வீட்டில் குழந்தைகள் படுத்துறங்கிய கட்டிலில் நாகப்பாம்பு இருந்ததால், பதற்றம் நிலவியது.
x
சோனாங்குப்பத்தில் வசித்து வரும் மீனவர் பிச்சையின், மகள் மற்றும் மகன் இருவரும், கட்டிலில் படுத்து தொலைகாட்சி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, மெத்தை விரிப்பின் கீழ் ஏதோ ஒன்று நெளிந்து செல்வதை உணர்ந்த சிறுமி கட்டிலில் இருந்து கீழே இறங்கி பார்த்துள்ளார். விரிப்பின் கீழே இருந்த பாம்பு, படமெடுத்தபடி எட்டிபார்த்தது. பயமறியாத சிறுவர்கள், அதை செல்போனில் வீடியோ எடுத்தனர். இதனிடையே, அங்கு வந்த பாம்பு பிடிப்பவர், நாகப்பாம்பை பிடித்து,  காப்புக் காட்டில் விட்டு சென்றார். 


Next Story

மேலும் செய்திகள்