குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தையை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

உதகையில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தையை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை
x
உதகையில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலி வியூ பகுதியில் உலா வரும் சிறுத்தை ஆடு, உள்ளிட்வைகளை வேட்டையாடி வருகிறது. இந்நிலையில் அசரப் என்பவர் ஆடு மேய்த்து கொண்டிருந்த போது, அங்கு வந்த சிறுத்தை ஆட்டை வேட்டையாட முயன்றுள்ளது. அவர் சத்தம் எழுப்பியதால் அதனை விட்டு சென்று விட்டது. மேலும் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை குடியிருப்பு பகுதியில் சிறுத்தை உலா வந்துள்ளது. எனவே சிறுத்தை புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் வலியுறுத்தியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்