தண்ணீர் இல்லா பேரிடர் நிச்சயம் வரும் : திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர், இயற்கை அழிவின் ஆரம்பத்தில் நாம் இருப்பதாகவும், தண்ணீரை சேமிக்காமல் நீர்நிலைகள் அனைத்தையும் அழித்து விட்டதாக கூறினார். தண்ணீர் இல்லா பேரிடர் நிச்சயம் வரும் என்றும் அதனுடைய ஆரம்பம் தான் தற்போதைய குடிநீர் பிரச்சனை என்றும் ஆட்சியர் குறிப்பிட்டார்.
Next Story