முசிறி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 5 பேர் கைது

மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 3 லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் 5 பேரைக் கைது செய்தனர்.
முசிறி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 5 பேர் கைது
x
மணல் கடத்தலில் ஈடுபட்டதாக, 3 லாரிகளை பறிமுதல் செய்த போலீசார், 5 பேரைக் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், முசிறி அருகே மணல் கடத்தலை தடுப்பதற்காக போலீசாரும் வருவாய்த் துறையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.மேலும், இரண்டு கனரக லாரிகளையும் மடக்கி பிடித்தனர். இதில், அரசு அனுமதியின்றி மணல் கொண்டு செல்வது தெரிய வந்தது.இதையடுத்து, பாலசுப்ரமணியன், தனுஷ் பிரபு, மாதேஸ்வரன், சிவக்குமார், பிரபாகரன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்