வெளி நாடு சென்ற கணவரை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் மனு

வெளிநாடு சென்ற கணவரை மீட்டு தரக்கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தனது மகளுடன் சென்று மனு அளித்துள்ளார்.
வெளி நாடு சென்ற கணவரை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் மனு
x
வெளி நாடு சென்ற கணவரை மீட்டு தரக்கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தனது மகளுடன் சென்று மனு அளித்துள்ளார்.திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த முருகேசன் என்பவர் ஆடு மாடு மேய்க்கும் வேலைக்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு  சவுதி அரேபியாவிற்கு சென்றதாக தெரிகிறது. அங்கு சென்றது முதல், முருகேசன், எந்த வித தொடர்பும் இல்லை எனவும், இதுகுறித்து அவரை அனுப்பி வைத்தவரிடம் கேட்டபோது முறையான பதில் கிடைக்கவில்லை என்றும் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில்,திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மகளுடன் வந்த அவரது மனைவி மகேஸ்வரி, கணவரை மீட்டுத்தரக்கோரி மனு அளித்தார்.  இதற்கு முன்பு பலமுறை மனு அளித்துள்ளதாகவும், இதுவரை  எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கபடவில்லை எனவும் தாயும் மகளும், வேதனையுடன் குற்றம்சாட்டி சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்