சிதம்பரம் அருகே இருளர் சமூக சிறுவர் சிறுமியர்கள் பள்ளியில் சேர்ப்பு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தில்லைநாயகபுரம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
சிதம்பரம் அருகே இருளர் சமூக சிறுவர் சிறுமியர்கள் பள்ளியில் சேர்ப்பு
x
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே தில்லைநாயகபுரம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புமாறு இருளர் இன மக்களிடம் பள்ளி ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து தில்லைநாயகபுரம் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் 8 இருளர் இன மாணவ மாணவிகள் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சால்வை மற்றும் மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வந்து பள்ளியில் சேர்த்தனர். இந்த மாணவர்களுக்காக சிறப்பு ஆசிரியர் நியமிக்கப்பட்டு பாடம் கற்பிக்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்