நெருங்கும் நடிகர் சங்க தேர்தல் : விஷால் அதிரடி பேட்டி
பாண்டவர் அணியினர் மதுரை, திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று நாடக நடிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23 ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி பாண்டவர் அணியினர் மதுரை, திண்டுக்கல், கரூர்
உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று நாடக நடிகர்களை சந்தித்து
ஆதரவு திரட்டி வருகின்றனர். திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம்
பேசிய நடிகர் விஷால் மற்றும் நாசர் ஆகியோர், கடந்த 3 ஆண்டுகளில்
தங்களது பாண்டவர் அணி சிறப்பாக செயல்பட்டதாக கூறினர்.
நடிகர் சங்க கட்டடப் பணிகள் விரைவில் முடிவடையும் என்றும், கடந்த முறை அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் பாண்டவர் அணி நிறைவேற்றி உள்ளதாகவும் கூறினர்.
Next Story