கலை -அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்புகளை 4 ஆண்டுகளாக மாற்றமா?
கலை -அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்புகளை 4 ஆண்டுகளாக மாற்ற புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
புதிய கல்வி கொள்கைக்கான வரைவு அறிக்கை மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன. அவை ஏற்கப்பட்டால் கலை - அறிவியல் கல்லூரிகளில் தற்போது 3 ஆண்டுகளாக உள்ள பி.ஏ. , பிஎஸ்சி உள்ளிட்ட பட்டப்படிப்புகள் 4 ஆண்டுகளாக மாற வாய்ப்புள்ளது. அதை தேந்தெடுக்கும் உரிமை சம்பந்நப்பட்ட கல்லூரிகளுக்கு அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி முறையை சீர்படுத்த அனைத்து உயர்கல்வி நிறுவனங்களையும் 3 வகையாக பிரிக்கவும் நிகர்நிலை பல்கலைக்கழகம், இணைப்பு பல்கலைக்கழகம் போன்ற பெயர்கள் நீக்கவும் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தாராளவாத கலைப்பிரிவு பட்டப்படிப்புகள் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் இடம்பெறவும், பி.எல்.ஏ. எனும் தாராளவாத கலைப்பிரிவு மற்றும் பி.எல்.இ. எனும் தாராளவாத கல்வியல் பிரிவு 4 வருட பட்டப்படிப்புகளை அறிமுகம் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை 3 வகையாக பிரிக்கவும், தேசிய உயர்கல்விக்கான தர நிர்ணய கட்டமைப்பை உருவாக்க ஜி.இ.சி. எனும் பொது கல்வி நிறுவனம் அமைக்கவும் புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இளங்கலை பட்டப்படிப்புகளில் ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்தவும், நாடு தழுவிய அளவில் ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்த தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை அமைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
எம்பில் படிப்பு நிறுத்தப்படும் என்றும் ஆராய்ச்சியுடன் கூடிய 4 வருட பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு பி.எச்.டி செய்வதற்கான தகுதியாக ஏற்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஜி.இ.சி. மூலம் மிகப்பெரிய திறந்த வெளி இணைய கல்வி படிப்புகளில் ஈட்டப்படும் கிரெடிட் புள்ளிகளை அங்கீகரிக்க ஒரு அமைப்பை உருவாக்கவும், 2023 -ஆம் ஆண்டிற்குள் நாட்டில் ஒரே ஒரு ஆசிரியர் பயிற்சி திட்டம் மட்டும் இருக்க வேண்டும் என்றும் புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Next Story