பிரதமர் மோடி பெயரில் வீடு கட்டி தருவதாக மோசடி - வழக்கறிஞர் உட்பட 5 பேர் கைது

பவானி அருகே பிரதமர் மோடி பெயரில் வீடு கட்டி தருவதாக கூறி கிராம மக்களிடம் மோசடியில் ஈடுபட்ட வழக்கறிஞர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
பிரதமர் மோடி பெயரில் வீடு கட்டி தருவதாக மோசடி - வழக்கறிஞர் உட்பட 5 பேர் கைது
x
பவானி அருகே பிரதமர் மோடி பெயரில் வீடு கட்டி தருவதாக கூறி கிராம மக்களிடம் மோசடியில் ஈடுபட்ட  வழக்கறிஞர்  உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள பனங்காட்டு காலனி பகுதி மக்களிடம், பிரதமர் மோடி பெயரில் இயங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டி தருவதாக கூறி ஒரு கும்பல் 5 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் மோசடி கும்பல் என்பது தெரியவந்தது. இதனையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்