பல்வேறு துறைகளை சார்ந்து இயங்குவதால் சீருடை வழங்குவதில் காலதாமதம் - செங்கோட்டையன்

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் சீருடைகள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்
பல்வேறு துறைகளை சார்ந்து இயங்குவதால் சீருடை வழங்குவதில் காலதாமதம் - செங்கோட்டையன்
x
தேர்தல் நடத்தை விதிகள்  அமலில் இருந்ததால் சீருடைகள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். சத்தியமங்கலம் அருகே, காராப்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையை தொடங்கி வைத்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  52 நாட்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் சீருடைகள் உரிய நேரத்தில் வழங்க இயலவில்லை என்றும், பள்ளிக்கல்வித்துறை பல்வேறு துறைகளை சார்ந்திருப்பதால் சீருடை வழங்குவதில் சிறிது காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.  விரைவில்  அனைத்து மாணவ, மாணவியருக்கும் சீருடைகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்