காதலிக்கு செல்போன் வாங்கி கொடுத்த இளைஞர் : காதல‌னின் தந்தை வெட்டி படுகொலை

கரூரில் காதல் விவகாரத்தால் இரு குடும்பத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோத‌லில் காதலனின் த‌ந்தை வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
காதலிக்கு செல்போன் வாங்கி கொடுத்த இளைஞர் : காதல‌னின் தந்தை வெட்டி படுகொலை
x
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கம்மநல்லூரை சேர்ந்த வழக்கறிஞர் பிச்சை முத்து. இவரது மகளை அதே பகுதியை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் காதலித்து வந்த‌தாக தெரிகிறது. இது தொடர்பாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக இரு குடும்பத்தாருக்கும் இடையே முன்பகை இருந்துவந்துள்ளது. இந்த நிலையில், நேற்று பிச்சை முத்து , தனது மகளிடம் இருந்து காதலன் மணிவண்ணன் வாங்கி கொடுத்த செல்போன் சிக்கியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த, பிச்சை முத்து, மணிவண்ண‌னின் தந்தை பரமசிவத்திடம் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டுள்ளார் வாக்குவாதம் முற்றியதில், வழக்கறிஞர் பிச்சை முத்து, அவரது தம்பி முருகானந்தம் ஆகியோர் சேர்ந்து பரம சிவத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட பரம சிவம் செல்லும் வழியிலே உயிரிழந்தார். இது தொடர்பாக மணிவ‌ண்ணன் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் முருகானந்தம் மற்றும் வழக்கறிஞர் பிச்சை முத்துவை தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்