சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் தீவிர பாதுகாப்பு

சென்னையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அண்ணா பல்கலைக்கழகம், ராணி மேரி மற்ளும் லயோலா கல்லூரிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் தீவிர பாதுகாப்பு
x
சென்னையில் வடசென்னை, மத்திய சென்னை மற்றும் தென் சென்னை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராணி மேரி கல்லூரி லயோலா கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் தமிழக காவல்துறையினர் , அதிவிரைவு படையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர்  தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகள் மற்றும் வாக்கு எண்ணும் மையத்தின் நுழைவுவாயில்களில்  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் அறிவிப்பு பலகைகள் , ஒலிபெருக்கி , விளக்குகள், பூத் ஏஜென்ட்களுக்கான அறைகள் ஆகியவை அமைக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்