குடிசை வீட்டுடன் தீயில் கருகி 3 மாத கர்ப்பிணி பலி : கொலையா என்று போலீசார் தீவிர விசாரணை

திருவண்ணாமலை பரமனந்தலை சேர்ந்தவர் சக்திவேல். இவர் தனது மனைவி தீபா மற்றும் 2 குழந்தைகளுடன் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்தார்.
குடிசை வீட்டுடன் தீயில் கருகி 3 மாத கர்ப்பிணி பலி : கொலையா என்று போலீசார் தீவிர விசாரணை
x
திருவண்ணாமலை பரமனந்தலை சேர்ந்தவர் சக்திவேல். இவர், தனது மனைவி தீபா மற்றும் 2 குழந்தைகளுடன் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்தார். தீபா, 3 மாத கர்ப்பமாக இருந்த நிலையில், அவரை வீட்டில் தனியாக விட்டுவிட்டு, இரு குழந்தைகளுடன் சக்திவேல், திருவிழாவுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சக்திவேல் வீடு திரும்பிய போது, குடிசை  தீப்பற்றி எரிந்துகொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் வருவதற்குள், வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. இதையடுத்து தீபாவின் சடலத்தை முற்றிலும் எரிந்த நிலையில் மீட்ட காவல்துறையினர், கணவர் சக்திவேலிடம் விசாரணை செய்தனர். இதில், முன்னுக்கு பின் முரணாண தகவலை அவர் கூறியதால் இது கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்