12,915 அரசு ஊழியர்களின் தபால் ஓட்டுக்கான விண்ணப்ப படிவங்கள் நிராகரிப்பு

நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்ட 12 ஆயிரத்து 915 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தபால் வாக்கு விண்ணப்ப படிவங்கள் நிராகரிக்கப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
x
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பணியில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரின் தபால் வாக்குக்கான விண்ணப்ப படிவங்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சென்னையை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் சாந்தகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்ப படிவம் 12, 12ஏ முறையாக வழங்கப்படவில்லை என, குற்றம் சாட்டி இருந்தார். 

இந்த மனு மீதான விசாரணை  நீதிபதிகள் சி.வி கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும்  காவல்துறையினர் என 4 லட்சத்து 35 ஆயிரம் 3 பேருக்கு தபால் வாக்களிக்க, படிவங்கள் வழங்கப்பட்டதாக இந்திய தேர்தல் ஆணையம், அறிக்கை தாக்கல் செய்தது. முறையாக படிவங்கள் நிரப்பப்படாமல் இருந்தது போன்ற பல்வேறு காரணங்களால் 
12 ஆயிரத்து 915 பேரின் தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அந்த அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளது. இதையடுத்து, தபால் வாக்குகள், தொடர்பான அனைத்து விவரங்களையும் 2 நாட்களில் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வருங்காலத்தில் தபால் வாக்குகள், பதிவில் இது போன்ற குழப்பங்கள் நடைபெறாமல், நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

"12,915 தபால் ஓட்டுகள் நிராகரிப்பு " : மாயவன் (ஜாக்டோ ஜியோ) கருத்து

Next Story

மேலும் செய்திகள்