19 வயது இளைஞர் மைனர் பெண்ணுடன் காதல் திருமணம் : இளைஞர் கைது

வேலூர் அருகே மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்த இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.
19 வயது இளைஞர் மைனர் பெண்ணுடன் காதல் திருமணம் : இளைஞர் கைது
x
குடியாத்தம் அடுத்த பொன்னம்பட்டி பகுதியைச் சேர்ந்த 19 வயதாகும் அஜித் என்ற இளைஞன் வெல்டராக பணியாற்றி வந்தார். அந்தப் பகுதியில் வசிக்கும்  17 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில், காதலாக மாறியதில், இருநாட்களுக்கு முன் பெண்ணை அழைத்துச் சென்ற இளைஞர், திருப்பதியில் வைத்து திருமணம் செய்துள்ளார். வீடு திரும்பிய நிலையில், புதுப்பெண்ணை அஜித்குமார் வீட்டார் ஏற்கவில்லை. இதனால், மனமுடைந்த மணப்பெண், ஸ்டாப்ளர் பின்னை விழுங்கி தற்கொலைக்கு முயற்சித்தார். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். இதனிடையே, 17 வயது மைனர் பெண்ணை கடத்தி ஏமாற்றியதாக, அஜித்குமாரை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்த குடியாத்தம் போலீசார்,  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அஜீத்குமாரின் தாயார் ராணி மற்றும் அவரது உறவினர் அருண் ஆகியோரையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்