மணப்பாறை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உடையாபட்டியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி பெண்கள் காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
x
திருச்சி மாவட்டம்  மணப்பாறை அருகே உடையாபட்டியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி பெண்கள் காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. டி.உடையாபட்டி, ராமகவுண்டம்பட்டி பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக கடும் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளதாக கூறும் கிராம மக்கள், ஆழ்குழாய் கிணறு பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது  அதுவும் வற்றிவிட்டதால் குடிநீர் இன்றி அவதிப்படுவதாக தெரிவித்தனர். இதுகுறித்து பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறிய அவர்கள், உடையாபட்டி பகுதியில் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து மறியலை கைவிட்டடனர். 

Next Story

மேலும் செய்திகள்