மணப்பாறை அருகே குடிநீர் வசதி கோரி சாலை மறியல்...காலிக்குடங்களுடன் பெண்கள் போராட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குடிநீர் முறையாக விநியோகிக்கவில்லை என கூறி, காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
x
டி.உடையாபட்டி,  இராமகவுண்டம்பட்டி கிராம மக்கள் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் வந்த தண்ணீரை பயன்படுத்தி வந்தனர். தற்போது ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் இல்லாததால் குடிநீர் வசதி செய்து தரக்கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள்  உடையாபட்டி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் மேற்கொண்ட சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து சுமார் 3 மணி நேரமாக நடைபெற்ற போராட்டம் கைவிடப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்