இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை
திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளரின் வேட்புமனு, இழுபறிக்கு பின் ஏற்கப்பட்டது.
4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்று வருகிறது. திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கான இடைதேர்தலில் 63 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் அவர்களின் மனுக்கள் மீதான பரிசீலனை திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி பஞ்சவர்ணன் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதிமுக வேட்பாளர் முனியாண்டியின் வேட்புமனுவை ஏற்கக் கூடாது என, திமுக வேட்பாளர் எதிர்ப்பு தெரிவித்தார். வேட்பாளர் பட்டியலில் இரண்டு இடங்களில் அவர் பெயர் இருப்பது முறைகேடு என வாதிட்டார். நீண்ட இழுபறிக்கு பிறகு அதி.மு.க. வேட்பாளரின் மனு ஏற்கப்பட்டது.
Next Story