தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுங்கள் - கொறடா ராஜேந்திரன்

அதிமுக எம்.எல்.ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர், தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சபாநாயகரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
x
சென்னை தலைமை செயலகத்தில், சபாநாயகர் தனபாலை, அதிமுக கொறடா ராஜேந்திரன், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் திடீரென சந்தித்து பேசினர். இதை தொடர்ந்து, தினகரன் ஆதரவு நிலைப்பாடு குறித்து 3 எம்.எல்.ஏக்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் பேசிய, அரசு தலைமை கொறடா ராஜேந்திரன்,கட்சி விதிகளை மீறி 3 பேரும் செயல்பட்டதாக வீடியோ ஆதாரங்கள் உள்ளதாகவும், எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

நான் தினகரன் ஆதரவாளரா? இல்லை அதிமுக எம்.எல்.ஏ.வா?  -  ரத்தனசபாபதி எம்.எல்.ஏ விளக்கம் 

அதிமுகவிற்கு துரோகம் செய்தேனா ? - கலைச்செல்வன் , எம்.எல்.ஏ விளக்கம்                                                                                                                                             

3 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரிக்கை - அரசியல் விமர்சகர் ஷ்யாம் கருத்து

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேர் போட்டோ ஆதாரங்கள் என்ன ?

Next Story

மேலும் செய்திகள்