தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுங்கள் - கொறடா ராஜேந்திரன்
அதிமுக எம்.எல்.ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர், தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சபாநாயகரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில், சபாநாயகர் தனபாலை, அதிமுக கொறடா ராஜேந்திரன், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் திடீரென சந்தித்து பேசினர். இதை தொடர்ந்து, தினகரன் ஆதரவு நிலைப்பாடு குறித்து 3 எம்.எல்.ஏக்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் பேசிய, அரசு தலைமை கொறடா ராஜேந்திரன்,கட்சி விதிகளை மீறி 3 பேரும் செயல்பட்டதாக வீடியோ ஆதாரங்கள் உள்ளதாகவும், எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
நான் தினகரன் ஆதரவாளரா? இல்லை அதிமுக எம்.எல்.ஏ.வா? - ரத்தனசபாபதி எம்.எல்.ஏ விளக்கம்
Next Story