சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய ஏப்ரல் 29 கடைசி நாள்

சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் வரும் 29ந்தேதி வரை சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரால் பெறப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய ஏப்ரல் 29 கடைசி நாள்
x
சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் வரும் 29ந்தேதி வரை சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரால் பெறப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். வங்கிகளுக்கு நான்காவது சனிக்கிழமை விடுமுறை நாளான நாளை 27 ந்தேதி மற்றும் ஞாயிற்றுக்கிழமையான  28 ந்தேதி வேட்பு மனுக்கள் பெறப்படமாட்டாது என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனால் வேட்பாளர்கள் இன்றும் வரும் 29 ந் தேதியான  திங்கட்கிழமை மட்டுமே தங்களது வேட்பு மனுக்களை  தாக்கல் செய்ய முடியும். 

Next Story

மேலும் செய்திகள்