மதுரையில் சிறைக்கைதிகள் போராட்டத்திற்கு என்ன காரணம் ?

மதுரை மத்திய சிறையில், போலீசார் துன்புறுத்துவதாக கூறி, கைதிகள் மதில்சுவர் மீது ஏறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
x
மதுரை மத்திய சிறையில்  சோதனை என்ற பெயரில் போலீஸார் துன்புறுத்துவதாகவும், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல்  ஊழலில் ஈடுபடுவதாகவும் கூறி, 50-க்கும் மேற்பட்ட கைதிகள் கட்டிடத்தின் மீது ஏறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது கற்களை  சாலையில் வீசியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சிறைத் துறைக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பிய அவர்கள், உடல் முழுவதும் பிளேடால் அறுத்துக்கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்