மருத்துவமனையில் உறவினர்களிடையே கடும் மோதல் - கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் பரபரப்பு

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அண்ணன் தம்பி உறவினர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையிலிருந்து நோயாளிகள் ஓட்டம் பிடித்தனர்.
மருத்துவமனையில் உறவினர்களிடையே கடும் மோதல் - கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் பரபரப்பு
x
விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அண்ணன் தம்பி உறவினர்கள் இடையே  கடும் மோதல் ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையிலிருந்து நோயாளிகள் ஓட்டம் பிடித்தனர். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வராசு , செல்வசீமான் இருவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் உள்ள நிலையில், செல்வசீமான் மனைவி சந்திரா விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மருத்துவமனைக்கு வந்த செல்வராஜின் உறவினர்களும் செல்வ சீமான் உறவினர்களும்  திடீரென்று மோதிக் கொண்டனர். மோதல் முற்ற கல்களை   வீசி   ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் இருவர் மண்டை உடைந்தது. சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.  இதனால் விருத்தாசலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பதற்றம் நிலவியது. இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் 5 பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்