தி.மு.க பிரமுகர் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

தி.மு.க பிரமுகர் கார் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக வந்த புகாரில் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
x
அண்ணா நகர் பகுதி திமுக செயலாளர் பரமசிவம், கீழ்ப்பாக்கத்தை அடுத்த டி.பி.சத்திரம் பகுதியில் வசித்து வருகிறார். நேற்றிரவு அவரது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிச் சென்றுள்ளனர். சப்தம் கேட்டு பரமசிவம் வெளியே வருவதற்குள் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பரமசிவம் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் ராஜேந்திரன், நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். சிசிடிவி கேமிராவில் பதிவான இந்த சம்பவம் தொடர்பான காட்சிகளை வெளியிட்ட காவல்துறை, மர்ம நபர்களை தேடி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்