திருத்தணி அருகே நகைக்காக தாய், மகன் கொலை...

தாய் மற்றும் மகனை கொடூரமாக கொலை செய்துவிட்டு நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் திருத்தணி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
x
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த பி.டி.புதூர் பாலாஜிநகரை  சேர்ந்த வனபெருமாள் என்பவர் தனியார் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணியற்றி வருகிறார். வனபெருமாள் இரவு பணிக்கு சென்று விட்ட நிலையில் அவரது மனைவி வீரலட்சுமி மற்றும் பத்து வயது மகன் போதிராஜ் ஆகியோர் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். இந்த நிலையில் அதிகாலை 5 மணி அளவில் தூக்கத்திலிருந்து எழுந்த  வீரலட்சுமி, வீட்டின் முன் தண்ணீர் தெளித்துக்கொண்டிருந்த போது வீட்டிலிருந்து சத்தம் வரவே உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது பின் பக்கமாக வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் திடீரென்று வீட்டின் கதவை பூட்டியுள்ளனர். இதனையடுத்து கொள்ளையர்களிடமிருந்து தப்பிக்க சத்தம் போட்ட வீரலட்சுமியின், தலையை சுவற்றில் மோதி கொலை செய்த கொள்ளையர்கள், தூங்கிக்கொண்டிருந்த அவரது 10 வயது மகனை பள்ளி அடையாள அட்டை கயிற்றால் கழுத்தை நெறித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர் வீரலட்சுமி அணிந்திருந்த நகை மற்றும் பீரோவில் இருந்த 22 சவரன் நகைகளை அவர்கள் கொள்ளையடித்துக்கொண்டு  சென்றுள்ளனர். பணி முடிந்து வீட்டிற்கு வந்த வன பெருமாள், மனைவி மற்றும் மகன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.  பின்னர் தகவல் அறிந்த போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளையர்களை பிடிப்பதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்