திமுக தலைவர் ஸ்டாலின் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு

திமுக தலைவர் ஸ்டாலின் மீது, பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு
x
திமுக தலைவர் ஸ்டாலின் மீது, பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 4ம் தேதி பொள்ளாச்சியில் பிரசாரம் செய்த ஸ்டாலின், அவதூறாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும், வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலைசாமி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் வேலுமணி, சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் மீது ஆதாரமில்லாமல் அவதூறு பரப்பியதாக கூறப்பட்டது. பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில், சிபிசிஐடி விசாரணைக்கு உத்திரவிடப்பட்டுள்ள நிலையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதிகாரிகளை மிரட்டுகிற வகையில், ஸ்டாலினின் பேச்சு அமைந்திருப்பதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்