"காங். தேர்தல் அறிக்கையை பார்த்து பிரதமருக்கு பயம்" - ஸ்டாலின்

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை பார்த்து, பிரதமர் நரேந்திரமோடி பயத்தில் இருப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காங். தேர்தல் அறிக்கையை பார்த்து பிரதமருக்கு பயம் - ஸ்டாலின்
x
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை பார்த்து, பிரதமர் நரேந்திரமோடி பயத்தில் இருப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தி.மு.க இருந்த வரை தமிழக எல்லைக்குள் நீட் தேர்வை நுழைய அனுமதிக்கவில்லை என விளக்கம் அளித்தார். அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம் என ஸ்டாலின் கூறினார். மேலும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகள் மற்றும் தொகுதி வளர்ச்சி மேம்பாடு குறித்து எடுத்துக்கூறி ஸ்டாலின் வாக்குசேகரித்தார். 

Next Story

மேலும் செய்திகள்