யாருக்கு வெற்றி...? - பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : இன்று இரவு 9.30 மணிக்கு...

40 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் வெல்லப் போவது யார் என்பது குறித்த தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று இரவு வெளியிடப்பட உள்ளது.
யாருக்கு வெற்றி...? - பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : இன்று இரவு 9.30 மணிக்கு...
x
தமிழகம், புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளுடன்,  18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் வருகின்ற 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வேட்பாளர்கள் வீதி வீதியாக வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வரும் நிலையில், கட்சித் தலைவர்களின் பிரசாரங்களும் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. எந்த கூட்டணி வெற்றி பெறும், எத்தனை இடங்களை கைப்பற்றும் என்பதே தொகுதிகள் தோறும் மக்களின் கேள்வியாக இருந்து வருகிறது. 

இந்தநிலையில், மக்களவை மற்று சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு? என்பது குறித்து தந்தி டிவி பிரமாண்டமான கருத்துக்கணிப்பை நடத்தி உள்ளது. அதன் முடிவுகள், இன்று இரவு 9.30 மணிக்கு தந்தி டிவியில் ஒளிபரப்பாகும், மக்கள் யார் பக்கம் நிகழ்ச்சியில் வெளியிடப்பட உள்ளது. இன்றைய நிகழ்ச்சியில், திருவள்ளூர், திருவண்ணாமலை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகை, திண்டுக்கல், வடசென்னை, பெரம்பலூர், ஆரணி, திருச்சி, உள்ளிட்ட மக்களவை தொகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாக உள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்