உயர் மின்னழுத்த கோபுரம் தேவையில்லை - வாக்காளர் அடையாள அட்டை திருப்பி அளிப்பு

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் அடையாள அட்டையை விவசாயிகள் திருப்பிக் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
உயர் மின்னழுத்த கோபுரம் தேவையில்லை - வாக்காளர் அடையாள அட்டை திருப்பி அளிப்பு
x
விளை நிலங்கள் வழி உயர் மின்னழுத்த கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் அடையாள அட்டையை விவசாயிகள் திருப்பிக் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மின்னழுத்த கோபுரம் தொடர்பாக புகாரளிக்க வைக்கப்பட்டுள்ள பெட்டியில் விவசாயிகள் 25 பேர் மனு செய்தனர்.அப்போது,விளை நிலங்களே சொந்தம் இல்லாத போது,வாக்களிக்க தேவையில்லை என்று, வாக்காளர் அடையாள அட்டையை புகார் பெட்டியில் போட்டுச் சென்றனர்.இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்