பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து கோஷம்

போலி சிம்கார்டு வழக்கில் கைதான 2 மாவோயிஸ்ட்கள்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து கோஷம்
x
சிவகாசியில் போலி ஆவணங்கள் மூலம் சிம்கார்டு வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ள 2 கேரளா மாவோயிஸ்ட்களான, அனுப்மேத்யூ ஜார்ஜ் மற்றும் சைனி-யை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்ப்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்த மாதம் ஏப்ரல் 1 ஆம்  தேதி மீண்டும் இருவரையும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். பின்னர் அனுப்மேத்யூ ஜார்ஜை போலீசார் வெளியே அழைத்து வந்த போது, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி கோஷமிட்டவாறு சென்றார்.

Next Story

மேலும் செய்திகள்