தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 53 வழக்குகள் பதிவு

நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில், சென்னையில் ஆயிரத்து 19 பேர் துப்பாக்கிகளை போலீசில் ஒப்படைத்து உள்ளனர்.
தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 53 வழக்குகள் பதிவு
x
நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில், சென்னையில் ஆயிரத்து 19 பேர் துப்பாக்கிகளை போலீசில் ஒப்படைத்து உள்ளனர். சென்னையில் உரிமம் பெற்ற மொத்த துப்பாக்கிகள் 2 ஆயிரத்து 700 என்றும், வங்கி போன்ற நிறுவனங்களுக்கு 750 துப்பாக்கிகள் மட்டும் பாதுகாப்பு பணிகளுக்காக வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 900 துப்பாக்கிகள் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள போலீசார், தேர்தல் விதிகளை மீறியதாக அனைத்து கட்சிகள் மீதும் 53 வழக்குகள் போடப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்