பொள்ளாச்சி பாலியல் விவகாரம் : 10 செல்போன், பென் டிரைவ், ஆவணங்கள் பறிமுதல்

பொள்ளாச்சி வழக்கு விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசுவின் வீட்டில் சிபிசிஐடி போலீசார் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினர்.
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் : 10 செல்போன், பென் டிரைவ், ஆவணங்கள் பறிமுதல்
x
கோவை மாவட்டம் மக்கினாம்பட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற, சிபிசிஐடி எஸ்.பி. நிஷா பார்த்திபன் தலைமையிலான 10 பேர் கொண்ட, குழு தீவிர சோதனை நடத்தியது. இந்த சோதனையில் 10 செல்போன், 7 சிம்கார்டுகள்,  மெமரி கார்டு, பென் ட்ரைவ் உள்ளிட்ட பல ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சோதனையை வீடியோ பதிவு செய்த போலீசார், திருநாவுக்கரசுவின் உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தி அதனை பதிவு செய்து கொண்டனர். சிபிசிஐடி போலீசாரின் விசாரணை 4 மணி நேரம் நீடித்தது. 

Next Story

மேலும் செய்திகள்