"எந்தக் காலத்திலும் அரசுப் பள்ளிகள் மூடப்படாது" - அமைச்சர் செங்கோட்டையன்

எந்தக் காலத்திலும் அரசுப் பள்ளிகள் மூடப்படாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
x
எந்தக் காலத்திலும் அரசுப் பள்ளிகள் மூடப்படாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபி தொகுதிக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு மடிக் கணினிகளை வழங்கிய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது இவ்வாறு கூறினார். கோடை விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்பு நடத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அவர், தமிழக கல்வித்துறை இந்தியாவுக்கே முன்னோடியாக திகழ்வதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்