சாதி மறுப்பு திருமணம் செய்ததால் பிரச்சினை
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே தாழ்த்தப்பட்ட சாதி பெண்ணை திருமணம் செய்து ஊர் தெருவில் குடி வைத்ததால் ஆத்திரமடைந்த மற்றொரு சாதியை சேர்ந்த சிலர் தாக்கியுள்ளனர்
காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்த சிவசங்கர், தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த கஸ்தூரி என்ற பெண்ணை கடந்த ஆண்டு திருமணம் செய்தார். இந்நிலையில், கஸ்தூரி, ஊர் தெரு பகுதியில் குடியிருக்க, ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், கஸ்தூரி மற்றும் அவரின் கணவர் மற்றும் மாமனாரை ஊர் தெருவை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த மாமனார் நடராஜன் மற்றும் சிவசங்கர் கஸ்தூரி தம்பதியினர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காங்கேயம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story