ஜெயலலிதா, ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் : கோவையை சேர்ந்த இளைஞரிடம் விசாரணை

சென்னை, போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் நடிகர் ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோவையை சேர்ந்த இளைஞரிடம் போலீசார் விராசணை நடத்தி வருகின்றனர்.
ஜெயலலிதா, ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் : கோவையை சேர்ந்த இளைஞரிடம் விசாரணை
x
சென்னை, போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும்  நடிகர் ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோவையை சேர்ந்த இளைஞரிடம் போலீசார் விராசணை நடத்தி வருகின்றனர். சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை 6 மணி அளவில் போனில் பேசிய மர்ம நபர் ஒருவர், வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இணைப்பை துண்டித்தார். இதையடுத்து போயஸ்கார்டன் சென்ற போலீசார் ஜெயலலிதா மற்றும் ரஜினிகாந்த் வீடுகளில் சோதனை நடத்தினர். ஆனால் அங்கு வெடிகுண்டுகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதுதொடர்பாக நடத்திய விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கோவையை சேர்ந்த முகமது அலி என்று தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்