ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு - திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிப்பு

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் வரும் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு - திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிப்பு
x
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் வரும் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டு இருந்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த நிலையில் ஆலையை திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வேதாந்தா நிறுவனமும் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது. இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில். வரும் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்க உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்