பாலியல் தொந்தரவு செய்வதாக +2 மாணவிகள் புகார்

12-ம் வகுப்பு மாணவிகள் அளித்த பாலியல் புகாரைத் தொடர்ந்து, ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் தொந்தரவு செய்வதாக +2 மாணவிகள் புகார்
x
12-ம் வகுப்பு மாணவிகள் அளித்த பாலியல் புகாரைத் தொடர்ந்து, ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூரில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் ரமேஷ் என்பவர் வேதியியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் தங்களிடம் தவறாக நடப்பதாக, தலைமை ஆசிரியரிடம் 12-ம் வகுப்பு மாணவிகள் புகாரளித்தனர். இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலருக்கு, தலைமையாசிரியர் தகவல் தெரிவித்தார். விசாரணையில் ஆசிரியர் ரமேஷ் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதைத் தொடர்ந்து, ஆசிரியர் ரமேஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்