ஓதுவார்களின் விவகாரத்தில் அரசு தூங்குகிறது - உயர் நீதிமன்றம் கருத்து

ஓதுவார்களின் கோரிக்கை தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு தூங்குவதாக மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஓதுவார்களின் விவகாரத்தில் அரசு தூங்குகிறது - உயர் நீதிமன்றம் கருத்து
x
தென்காசியை சேர்ந்த சிங்காரவேலன் என்பவர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஓதுவார்களுக்கு அரசு ஊழியர்களை போல சம்பளம் நிர்ணயம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், இதை அமல்படுத்தவில்லை என கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, பொதுநல உத்தரவாக பிறப்பிக்கப்பட்ட நிலையில் மனுதாரருக்கு மட்டும் அரசு பலன்கள் கிடைத்திருப்பது ஏற்க தக்கதல்ல என்று கூறிய நீதிபதி, இந்த விவகாரத்தில் அரசு தூங்குவதாக கூறினார். நீதிமன்ற உத்தரவை 2  வாரத்திற்குள் தமிழக அரசு நிறைவேற்ற தவறினால் அறநிலைய துறை முதன்மை செயலர், ஆணையர் ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிட கூடும் என எச்சரித்த நீதிபதி, வழக்கினை 2 வார காலத்திற்கு ஒத்திவைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்