தக்கலையில் மேம்பாலம் அமைக்க எதிர்ப்பு : வணிகர்கள் 2வது நாளாக போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வணிகர்கள் 2வது நாளாக போராட்டம்.
தக்கலையில் மேம்பாலம் அமைக்க எதிர்ப்பு : வணிகர்கள் 2வது நாளாக போராட்டம்
x
கன்னியாகுமரி மாவட்டம்  தக்கலை தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் மேம்பாலம் அமைக்க வரும் 19ம் தேதி வருகை தரும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இதற்கு அப்பகுதி வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து இரண்டாவது நாளாக உரிமை முழக்க பேரணியும், தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. முன்னதாக  மணலி  பகுதியிலிருந்து துவங்கிய பேரணி, தபால் நிலையம் முன்பு வந்தடைந்தது. இந்தப் போராட்டத்தில் குளச்சல், கிள்ளியூர், பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட வணிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்